674. கார்ய்யா
உபாசகனால் ஹ்ருதயத்தில் எப்பொழுதுமே த்யானிக்கப்படுவதால் தன் இயல்பான முழு ஸ்வரூபத்துடனேயே அங்கேயே நித்யவாசம் செய்பவளாகவும், அவன் ஆற்றும் ஆராதனக்ரமங்களில் தானே ஊடுருவி அவற்றிலேயே உறைபவளாகவும், அவன் தன் மந்த்ரத்தையே எப்போதும் ஜபிப்பதால் அவனுடைய புத்தியிலே இடையறாது லீலா விலாசமாக ஸாந்நித்யமாக விளங்குபவளாகவும், இங்கனமாக தன் ப்ரிய பக்தனுடைய எல்லாக் காரியங்களிலும் அவனைச் ஸூழ்ந்தே அன்பு பொங்கி வழிய இன்பமயமாக ஊடாடுபவளான இஷ்ட தேவதை.