ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்
இது ஒரு மிகச் சிறந்த கௌல ஸ்தோத்திரம். தக்ஷினகாளி உபாஸனத்திற்கு இது ஒரு இன்றி யமையாத வழி காட்டியாகும். மந்த்ரம், யந்த்ரம், த்யானம், ஸாதனை, ஸரணாகதி, ஸ்துதி, ஷமாபணம், பலஸ்ருதி ஆகிய எல்லா விஷயங்களும் இதில் அடங்கி உள்ளன. இதனை நமக்கு அளித்து அருளியவர் ஸ்ரீ மஹாகாலரே. இது இருபத்திரண்டு ஸ்லோகங்களில் விபரிக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம் இருபத்திரண்டு அக்ஷரங்கள் கொண்ட மூல மந்த்ரமாகிய வித்யராஜ்ஞியை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.