Tuesday 31 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (36)



767.   காலநிர்ணாஸினீ

வித்யோபாஸனமும் ஆராதன க்ரமங்களும் விதிமுறைப்படி ஸாங்கோ பாங்கமாக  நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்பணித்து அனன்யமாகத் தன்னிடம் ஸரணம் அடைந்து தன் பக்தனுக்கு கால கதியால் விளையும் பிறப்பு, இறப்பு, மூப்பு, முதலான பரிணாமங்கள் எதுவும் நேரிடாவண்ணம் அவை எல்லாவற்றையும் அறவே ஒழித்து அவன் சீக்கிரமே முக்திபெற  அநுக்ரஹிக்கும் ஔதார்ய மூர்த்தி.

Monday 30 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (35)


741.   காம்பில்யவாஸினீ

இந்த்ரப்ரஸ்தத்திற்கு  கிழக்கே பாஞ்சால நாட்டில் கங்கா நதி தீரத்தில் ஸர்மண்வதீ  தீரம் வரையிலும்  பரவியிருந்த காம்பில்ய நகரத்தில் கோயில்கொண்டருளி உலக மக்களை ஆட்கொண்டு அருள்பவள்.

Sunday 29 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (34)


719.   கார்ம்மணா

தானே க்ரியா  ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் தன் பக்தர்கள் யாவருக்கும் புத்தியில்  ஸ்புரிக்கும்  எந்த  எண்ணத்தையும் எந்தக்  கருத்தையும் மந்த்ர பிரயோகத்தால்  செயல்படுத்தி பயன் காணும்  மனப்பாங்கும்  திறமையும் அருளும் ஜகன்மாதா.

Wednesday 25 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (33)


698.   காம்ஸ்யத்வனிமயீ

வெண்கலத்தின்  இனிய  நாதத்தில்  உறைபவள்

699.   காமஸுந்தரீ

மாத்ருகா மண்டலத்தில்  அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள்  யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும்  இனிய  நாதமே தன் வடிவமாகக்  கொண்டு அவற்றிலேயே  எப்போதும்  ஊடாடி  மகிழும்  நாதரூப ஸுந்தரி.

Tuesday 24 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (32)


674.   கார்ய்யா

உபாசகனால்  ஹ்ருதயத்தில்  எப்பொழுதுமே  த்யானிக்கப்படுவதால் தன் இயல்பான  முழு ஸ்வரூபத்துடனேயே அங்கேயே  நித்யவாசம் செய்பவளாகவும்,  அவன்  ஆற்றும்  ஆராதனக்ரமங்களில்  தானே ஊடுருவி  அவற்றிலேயே உறைபவளாகவும், அவன் தன் மந்த்ரத்தையே  எப்போதும் ஜபிப்பதால் அவனுடைய புத்தியிலே  இடையறாது லீலா விலாசமாக ஸாந்நித்யமாக விளங்குபவளாகவும், இங்கனமாக தன் ப்ரிய பக்தனுடைய எல்லாக் காரியங்களிலும் அவனைச்  ஸூழ்ந்தே அன்பு பொங்கி வழிய இன்பமயமாக ஊடாடுபவளான  இஷ்ட தேவதை.

Monday 23 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (31)



652.   காமராத்ரி :

பஹுல  சதுர்த்தஸி  திதிக்கு  அதிஷ்டான  தேவதை.  

653.   காமதாத்ர்ரீ   

தன்  ப்ரேம பக்தன் விரும்பியதை  விரும்பியவாரே  வரையாது வழங்கி  அருளும்  பெருவள்ளல்.

Wednesday 18 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (30)



627.   காலாஞ்ஜனஸமாகாரா

மைபோல் கரிய உடல் சாயல் கொண்டவள்.  அதாவது எவ்வளவு அபாரமான புத்தி கூர்மை உள்ளவனாக இருந்தபோதிலும் யாவராலும் எளிதில் அறிந்து கொள்ள  முடியாதபடி ஒரு பெரும் புதிர் போன்ற ஸ்வரூபம் உள்ளவள்.

Tuesday 17 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (29)



598.   காமா

கர்மபலம்  (ஊழ்) , வாசனை பிரதிபந்தம் என்ற எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டவள். தன்இச்சையாக  வேறு எவருடைய ஏவலும் இல்லாமல்  இயங்குபவள்.  வேறு எந்த தேவதையும் மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்தின் ஸக்தியை அநுஸரித்தே இயங்க, பராசக்தி ஆகிய தக்ஷின காளிகை மட்டும்  மாத்ருகா மணடலத்தின்  அதிதேவதை  ஆதலால் மாத்ருகைகளைத்  தன் விருப்பப்படி இயக்குபவள்.

Monday 16 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (28)


573.   க்ரகசா 

அரம்  மரத் துண்டை அறுப்பது போல் துஷ்டர்களை கடுமையாக தண்டிப்பவளாயினும் நாற்புறமும் சிறந்த நறுமணம் வீசும் தாழம்பூவை ஆபரணமாக அணிவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள்.  அதாவது ஸுவாசனைகள் (பூர்வ்கர்மத்தில் நற்கருமங்கள் பல புரிந்துள்ளதால் உண்டான நற்பண்புகள்  மலிந்துள்ள சாதுக்கள் எல்லோரையும் தன் அநுக்ரஹத்தால் மகிழ்வித்து ஆட்கொண்டு அருள்பவள். அதாவது துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து உலகை ஆண்டருள்பவள்.

Friday 13 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (27)



554.   கல்பலதா

ஸிவ  தத்துவ  ப்ரதிபாதமாகிய  வ்ருக்ஷத்தின்  மீது  ஆரோஹணிக்கும்  ஸக்தி  தத்துவ ப்ரதிபாதமாகிய "லதா " எனப்படும் சக்தி  சிவ தத்துவ  ஸ்வரூபிணியாகத்  தன் பக்தனின் புத்தியில் ஆவிர்பவித்து,  அங்கு தானாகவே ப்ரஹ்மஞான  ஜ்யோதிஷ்மதியாகவும் மனோல்லாஸ லாஸ்ய லோலினியாகவும் அமர்ந்து  அவனுடைய ஸாதனா க்ரமங்களில் தன் வித்யுத்  ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து அவனை ஒரு ஆதர்ச  உபாஸக தல்லஜனாக பிரகாஸிக்கச் செய்து மகிழும் பரமாநுக்ரஹமூர்த்தி.

Wednesday 11 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (26)



537.   கபர்திஜபமாலாட்யா

யோகியர்கள் தம் ஸகுணப்ரஹ்ம உபாஸனத்தின் அங்கமான மந்த்ர ஜபத்தினூடே ஜப ஸங்க்யையைக் காப்பாற்றுவான்.  கையில் கணனத்திற்காகத் தரிக்கும் அக்ஷமாலையின் வ்யக்தியில் தானாகவே அமர்ந்து உறைந்து ஸாதகனின்  ஜபயஜ்ஞத்தைக் காத்துக் கொடுத்து தன் பக்தனுக்கு முக்தி அளிதருளும் யஜ்ஞஸ்வாமினீ.

Monday 9 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (25)



513.   கங்காலமோஹநிரதா

தன் வலப்பாகத்தில் ப்ரதிஷ்டை  ஆகிஇருக்கும் ஸர்வலோக மஹோபதேசகரான  மஹாகாலரை பரிபூரணமாகத்  தன் வசப்படுத்தி மோஹ நிர்த்தூதரான  அந்த யோகீஸ்வரரைத் தன்  மாயையால் தன்  விஷயத்தில்  மட்டும் மோஹம் அடையச் செய்யும்  த்ரைலோக்யமோஹனகரீ.

Sunday 8 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (24)


494.   கபிலாராத்யஹ்ருதையா

கபில முநிவராக அவதரித்து மகாவிஷ்ணு முதலான எல்லா தேவர்களாலும் விதிமுறைப்படி ஆராதிக்கப்படுபவள்.

Friday 6 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (23)


470.   கனீனா

ஆதி காலத்தில் பல்லாயிரக்  கணக்கான கல்பங்களுக்கு முன் திருக் கைலாயத்தில்  முப்பத்து  முக்கோடி  தேவர்கள்   புடை சூழ   ஸ்ரீ மஹாகாளரால்  ஆராதித்து, துதித்து அழைக்கப் பட்டபோது  யாவரும் பிரமிக்கத் தக்க வகையில்  ஆச்சர்யமாக, அசாதாரணமான அழகு லாவண்யத்துடன்  எல்லோரையும்  மோஹிக்கவைக்கும் ஜ்யோதிஸ் பரக்க வீச  திடீர்  என்று  ஓர்  அதிசய  பேரழகியாக ஆவிர்பவித்து அருளியவள்.

Thursday 5 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (22)



447.   கரப்ரியா

பத்ததியில் விதிக்கப்பட்ட முறைப்படி தன்னால் இயன்ற அளவு க்ரமமாக ஆராதனை க்ரமங்கள் நிகழ்த்தி தனக்கு அர்ப்பணித்து தன்னிடம் சரண மடையும் தன் பக்தர்களிடத்தில்அளவுகடந்த ப்ரியம் கொண்ட ஜகன்மாதா.

Wednesday 4 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (21)



426.   கலகேயா

மிக மதுரமான  த்வனியுடன் தன்னைக் குறித்து கானம் செய்யும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளி  மகிழ்பவள்.

Tuesday 3 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (20)



396.   கசார்ச்சிதா

தன்னுடைய கேச பாரத்தின் சோபையும் கரிய சாயலும் கொண்டு ஆகாஸ வீதியில் ப்ரகாசித்துக்கொண்டு ஸதா சஞ்சரித்துக் கொண்டே இருக்கும் மேக ஜாலங்களில் தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருளுபவள்.

Monday 2 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (19)



367.   கமடாஸ ஸம்சேவ்யா

கூர்ம பீடத்தின் சக்தி தானே ஆவதால் அந்த கூர்மாஸன  சக்தி தேவதைகளை ஆராதிக்கும் போது தன்னுடைய வ்யக்த மூர்த்தியை ஆராதிக்கும் தன்மயத்வ பாவத்துடனேயே பூஜைகள் செய்யும்  தன் பக்தர்களை ஆதரித்து, அவர்கள் பால் சுரக்கும் அன்புப் பெருக்கால் அவர்களைத் தன் ப்ரதிபிம்பமாகவே கண்டு அவர்களையே ஸாக்ஷாத் கூர்மாஸன பீட சக்தி தேவதைகளாகவே  பரிணமிக்கச் செய்து அவர்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்த மூர்த்தி.

Sunday 1 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (18)



342.   கர்மரேகாமோஹகரி

பூர்வ கர்ம பலன்களின் வரிசைத்  தொடர்ச்சியின் உபாதையால் அவதிப்படும் தன் பக்தர்களின் மயக்கத்தை  அழித்து அவர்களுக்கு புத்தித்தெளிவும் நிதானமும் சாந்தியும் அளித்தருளும் ஜகன்மாதா.