Showing posts with label ஸஹஸ்ரநாம விரிவுரை. Show all posts
Showing posts with label ஸஹஸ்ரநாம விரிவுரை. Show all posts

Saturday 11 January 2014

காளி ஸஹஸ்ரநாம பல ஸ்ருதி

"க"  காராந்த காளி ஸஹஸ்ரநாம பல ஸ்ருதி


இந்த தக்ஷினகாளிகையின் ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பக்தி ஸிரத்தையுடன் விதிமுறைப்படி பாராயணம் செய்தால் கிடைக்கும் நற்பயன்கள்  ஸ்ரீ மஹாகாளரால் விபரிக்கப் படுகிறது :-ஸர்வஸாம்ராஜ்ய மேதா என்கிற சர்வ ஸாம்ராஜ்யங்களையும் தரவல்ல வித்தை, ஸுந்தரிக்கு சக்தி கொடுத்தது என்றும் ஸ்ரீ தக்ஷினகாளிகையின் சிறப்புப்பெயர்கள் கொண்ட இந்த சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் ஸுந்தரிக்கு அன்பாக உபதேசிக்கப்பட்டது. இது ஸுந்தரிக்கு வரம் அருளும் வாயிலாக மிக   ரகஸ்யமாக சொல்லப்பட்டது.  ஆயினும் உனக்காகவே இப்போது வெளிப்படையாக உபதேசிக்கப்பட்டது.


Friday 10 January 2014

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (45)

   

980.   கோதண்டதாரிணீ

தர்ம ஸ்தபனத்திற்காக  துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் செய்வதற்காக, பண்டாதி அசுரர்களை ஸம்ஹரிப்பதற்காக  துர்க்கையாக அவதரித்து  கையில் ததுஸ் தரித்து அவர்களுடன் கோர யுத்தம் செய்து அரக்கர்களை அழித்தருளிய ஈடு இணையற்ற வீராங்கனை.

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (44)


 955.   கௌஸல்யா

இந்த பூலோகத்தில்  மனிதன் ஈட்டுவதற்கு குறிக்கோளாகக் கொள்ளத் தக்க எல்லா உயர் பொருள்களுக்கும் மேலானதாக  மஹோந்நதமாக உள்ளது ஸ்ரீ தேவி காளிகையின் அநுக்ரஹ ப்ரஸாதாமே.  அது ஒன்றால் தான் மனிதனின் ஸம்ஸார தளையைத்  தறிக்க இயலும்.

Thursday 9 January 2014

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (43)



932.   கீம்கீம் ஸப்தபரா

காளியை குறிக்கும் அக்ஷரமாகிய 'க 'கார மாத்ருகை மீது காமகலையாகிய 'ஈ ' காரமும் அதன் மேல் பிந்துவாகிய அநுஸ்வாரமும் ஏறி, இவ்வாறு இந்த மூன்று மாத்ருகைகளும் சேர்ந்து கீம் என்று ஆகி அதுவும் ஸக்தி-ஸிவ தத்துவத்தை ப்ரதிபாதிக்கும் வகையாக "கீம் கீம்" என்று உருவாகும் இந்தகூட்டை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும்  பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அளித்து அருள்பவள்.

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (42)



901. குகதிக்னீ

துர் மார்க்கமான நடத்தை உள்ளவர்களைத் தக்கபடி தண்டித்து அவர்களைத் தூய்மைப் படுத்தும் வேத நாயகி

Tuesday 7 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (41)



879.   குமதீ

ப்ருதிவீ தத்துவத்தின் வ்யக்த மூர்த்தியான மூலாதார சக்ர தள கமலத்தையே தன் ஸ்வரூபமாகக் கொண்டு தன் பக்தன் தன்னை அதனிலிலேயே முழுமையாக உணர்ந்து த்யானித்து இஷ்ட தேவதா தன்மயத்வம் எய்தி நித்ய சுகம் பெற அருளும் தானிதி.

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (40)



855.   குலபாலீ 

குலஸாதக  ஸமூஹத்தை  எல்லா வகைகளிலும் பரிபாலித்து  அருளும் அநுக்ரஹ மூர்த்தி.

Friday 3 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (39)


829.   குமாரீவ்ரதஸந்துஷ்டா

சிறு  கன்னிப்பெண்கள் தன்னை உத்தேசித்து அநுஷ்டிக்கும் காத்யாயனீ வ்ரதம்  முதலிய வ்ரதங்களில் பெரிதும் மகிழ்ச்சி அடைபவள்.  மேலும்  ஒரு பக்தன் ஒரு சிறு பெண்ணில் தன்னை  ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி ஆராதித்து  அதன் அங்கமாக தன்னை உத்தேசித்து அனுஷ்டிக்கும் வ்ரதங்களில் பெரிதும் மகிழ்ச்சி  அடைபவள்.

Thursday 2 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (38)



809.   குண்டகோலோத்பவாதாரா

வரம்பு கடந்து விரிந்து வானப் பரப்பினுள் அடங்கிய பல லோகங்களில் வாழும் ஜீவா சமூஹங்களே தன் பிரதி ரூபங்களாக அமைந்த ஆதாரங்களாகக் கொண்டு, ப்ரப்ஞ்ஜத்தின் ஆட்டமே தன் அசைவுகளாகக் கொண்டு லீலா விலாசமாக இயங்கி மகிழும் விஸ்வரூபிணீ.

Wednesday 1 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (37)



792.   குநடீ

தன் பக்தனுடைய குற்றங்களையும்  பாபங்களையும் அழித்துக் களைந்து அவனை ஆட்கொண்டருள்பவள்.

793.   குரரீ

தன் பக்தனுக்கு  மதுரமான  கண்ட  நாதத்தை அதாவது கந்தர்வனைப்போல் கானம்  செய்யும்  ஸக்தியை வழங்கி  அருளும்  க்ருபாநிதி.

Tuesday 31 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (36)



767.   காலநிர்ணாஸினீ

வித்யோபாஸனமும் ஆராதன க்ரமங்களும் விதிமுறைப்படி ஸாங்கோ பாங்கமாக  நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்பணித்து அனன்யமாகத் தன்னிடம் ஸரணம் அடைந்து தன் பக்தனுக்கு கால கதியால் விளையும் பிறப்பு, இறப்பு, மூப்பு, முதலான பரிணாமங்கள் எதுவும் நேரிடாவண்ணம் அவை எல்லாவற்றையும் அறவே ஒழித்து அவன் சீக்கிரமே முக்திபெற  அநுக்ரஹிக்கும் ஔதார்ய மூர்த்தி.

Monday 30 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (35)


741.   காம்பில்யவாஸினீ

இந்த்ரப்ரஸ்தத்திற்கு  கிழக்கே பாஞ்சால நாட்டில் கங்கா நதி தீரத்தில் ஸர்மண்வதீ  தீரம் வரையிலும்  பரவியிருந்த காம்பில்ய நகரத்தில் கோயில்கொண்டருளி உலக மக்களை ஆட்கொண்டு அருள்பவள்.

Sunday 29 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (34)


719.   கார்ம்மணா

தானே க்ரியா  ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் தன் பக்தர்கள் யாவருக்கும் புத்தியில்  ஸ்புரிக்கும்  எந்த  எண்ணத்தையும் எந்தக்  கருத்தையும் மந்த்ர பிரயோகத்தால்  செயல்படுத்தி பயன் காணும்  மனப்பாங்கும்  திறமையும் அருளும் ஜகன்மாதா.

Wednesday 25 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (33)


698.   காம்ஸ்யத்வனிமயீ

வெண்கலத்தின்  இனிய  நாதத்தில்  உறைபவள்

699.   காமஸுந்தரீ

மாத்ருகா மண்டலத்தில்  அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள்  யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும்  இனிய  நாதமே தன் வடிவமாகக்  கொண்டு அவற்றிலேயே  எப்போதும்  ஊடாடி  மகிழும்  நாதரூப ஸுந்தரி.

Tuesday 24 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (32)


674.   கார்ய்யா

உபாசகனால்  ஹ்ருதயத்தில்  எப்பொழுதுமே  த்யானிக்கப்படுவதால் தன் இயல்பான  முழு ஸ்வரூபத்துடனேயே அங்கேயே  நித்யவாசம் செய்பவளாகவும்,  அவன்  ஆற்றும்  ஆராதனக்ரமங்களில்  தானே ஊடுருவி  அவற்றிலேயே உறைபவளாகவும், அவன் தன் மந்த்ரத்தையே  எப்போதும் ஜபிப்பதால் அவனுடைய புத்தியிலே  இடையறாது லீலா விலாசமாக ஸாந்நித்யமாக விளங்குபவளாகவும், இங்கனமாக தன் ப்ரிய பக்தனுடைய எல்லாக் காரியங்களிலும் அவனைச்  ஸூழ்ந்தே அன்பு பொங்கி வழிய இன்பமயமாக ஊடாடுபவளான  இஷ்ட தேவதை.

Monday 23 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (31)



652.   காமராத்ரி :

பஹுல  சதுர்த்தஸி  திதிக்கு  அதிஷ்டான  தேவதை.  

653.   காமதாத்ர்ரீ   

தன்  ப்ரேம பக்தன் விரும்பியதை  விரும்பியவாரே  வரையாது வழங்கி  அருளும்  பெருவள்ளல்.

Wednesday 18 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (30)



627.   காலாஞ்ஜனஸமாகாரா

மைபோல் கரிய உடல் சாயல் கொண்டவள்.  அதாவது எவ்வளவு அபாரமான புத்தி கூர்மை உள்ளவனாக இருந்தபோதிலும் யாவராலும் எளிதில் அறிந்து கொள்ள  முடியாதபடி ஒரு பெரும் புதிர் போன்ற ஸ்வரூபம் உள்ளவள்.

Tuesday 17 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (29)



598.   காமா

கர்மபலம்  (ஊழ்) , வாசனை பிரதிபந்தம் என்ற எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டவள். தன்இச்சையாக  வேறு எவருடைய ஏவலும் இல்லாமல்  இயங்குபவள்.  வேறு எந்த தேவதையும் மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்தின் ஸக்தியை அநுஸரித்தே இயங்க, பராசக்தி ஆகிய தக்ஷின காளிகை மட்டும்  மாத்ருகா மணடலத்தின்  அதிதேவதை  ஆதலால் மாத்ருகைகளைத்  தன் விருப்பப்படி இயக்குபவள்.

Monday 16 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (28)


573.   க்ரகசா 

அரம்  மரத் துண்டை அறுப்பது போல் துஷ்டர்களை கடுமையாக தண்டிப்பவளாயினும் நாற்புறமும் சிறந்த நறுமணம் வீசும் தாழம்பூவை ஆபரணமாக அணிவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள்.  அதாவது ஸுவாசனைகள் (பூர்வ்கர்மத்தில் நற்கருமங்கள் பல புரிந்துள்ளதால் உண்டான நற்பண்புகள்  மலிந்துள்ள சாதுக்கள் எல்லோரையும் தன் அநுக்ரஹத்தால் மகிழ்வித்து ஆட்கொண்டு அருள்பவள். அதாவது துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து உலகை ஆண்டருள்பவள்.

Friday 13 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (27)



554.   கல்பலதா

ஸிவ  தத்துவ  ப்ரதிபாதமாகிய  வ்ருக்ஷத்தின்  மீது  ஆரோஹணிக்கும்  ஸக்தி  தத்துவ ப்ரதிபாதமாகிய "லதா " எனப்படும் சக்தி  சிவ தத்துவ  ஸ்வரூபிணியாகத்  தன் பக்தனின் புத்தியில் ஆவிர்பவித்து,  அங்கு தானாகவே ப்ரஹ்மஞான  ஜ்யோதிஷ்மதியாகவும் மனோல்லாஸ லாஸ்ய லோலினியாகவும் அமர்ந்து  அவனுடைய ஸாதனா க்ரமங்களில் தன் வித்யுத்  ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து அவனை ஒரு ஆதர்ச  உபாஸக தல்லஜனாக பிரகாஸிக்கச் செய்து மகிழும் பரமாநுக்ரஹமூர்த்தி.